ஒரு கலைஞனின் மனதை ஆய்வுக்குட்படுத்திப் பார்க்கும்போது அவன் பல அதிசயங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது தெரிகிறது. அவன் இந்த மனிதக் குலத்துக்கு ஏதோ ஒரு உண்மையைச் சொல்ல நினைக்கிறான்.
அந்த உண்மை அதிர்ச்சி தரக்கூடியது, சமூகத்தையே திருப்பிப் போடக்கூடியது. அந்த உண்மையைக் கண்டு நாம் ஒளிந்துகொள்ளலாம், ஓடிப்போகலாம், அந்த உண்மையைச் சொல்கிற கலைஞனைத் நாம் தூற்றலாம்,புறக்கணிக்கலாம். ஆனால் அவன் எப்போதும் ஒரு உண்மையை சொல்லிக்கொண்டே தான் இருப்பான். இந்த சமூக கட்டமைப்பை உடைத்துக்கொண்டே தான் இருப்பான். அவன் கலைக்காகத் தன்னையே அழித்துக்கொள்கிறான். அவனே கலையாக மாறுகிறான்.
Reviews
There are no reviews yet.